நிராகரிப்பின் மேல் நிராகரிப்பு
உங்களுக்குப் பிடித்த வேதாகம கதாபாத்திரம் யார்? 'தி சோசன் கேரக்டர் க்விஸ்' (Chosen Character Quiz) மூலம், சீமோன் பேதுருவுடன் எனக்கு நிறைய பொதுவான விஷயங்கள் இருப்பதை சமீபத்தில் கற்றுக்கொண்டேன். ஆனால் அது என் இறுதி நாயகனாக ராஜாவாகிய தாவீது இருப்பதை மாற்றவில்லை.
குறிப்பாக ஒரு சம்பவம் என் மனதில் நிற்கிறது:
“சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள் ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.” – 1 சாமுவேல் 30:6
உங்களுக்குச் சூழலை விவரிக்கிறேன். தன் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், இஸ்ரவேலருக்காக பல இராணுவ வெற்றிகளைப் பெற்ற போதிலும் தாவீது அவர்களால் நிராகரிக்கப்பட்டிருந்தான்; தான் உண்மையோடு ஊழியம் செய்த சவுல் ராஜாவால் துன்புறுத்தப்பட்டான், மேலும் தன் கூட்டாளியாக மாறிய பெலிஸ்திய படைகள் கூட தங்கள் நம்பிக்கையின்மை காரணமாக அவனது சேவையை விரும்பவில்லை.
தாவீது நிராகரிப்பின் மேல் நிராகரிப்பை எதிர்கொண்டிருந்தான், ஆனால் மோசமான ஒன்று வரவிருந்தது. அவர்களின் இறுதி அவமானத்திற்குப் பிறகு, தாவீதும் அவனது ஆட்களும் தங்களது இல்லமாகிய சிக்லாகிற்குத் திரும்பினர், ஆனால் அது அமலேக்கியர்களால் சுட்டெரிக்கப்பட்டு சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டனர். அவர்களின் மனைவிகள், பிள்ளைகள் மற்றும் உடைமைகள் அனைத்தும் போய்விட்டன!
நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதமாக, அவனது சொந்த ஆட்களே அவன் மீது குற்றம் சாட்டி, தாவீதைக் கல்லெறியப் பார்த்தார்கள்.😳 ‘மிகவும் நெருக்கப்பட்டான்’ என்பது ஒரு குறைத்து மதிப்பிடப்பட்ட வார்த்தையாகும்.
நம்மில் சிறந்தவர்களுக்குக் கூட, இது கடைசி விளிம்பாக இருந்திருக்கலாம்.
ஆனால் தாவீது ஒரு ஆச்சரியமான காரியத்தைச் செய்தான், அவன்:
…தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். – 1 சாமுவேல் 30:6
மற்றவர்களை உற்சாகப்படுத்துவதைப் பற்றியும் தேவனால் பலப்படுத்தப்படுவதைப் பற்றியும் நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். ஆனால் கர்த்தருக்குள் உங்களை நீங்களே எவ்வாறு பலப்படுத்திக்கொள்வீர்கள்?
தாவீதின் வாழ்க்கையைப் பார்த்து அது எப்படி என்று இந்த வாரம் நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா?
தாவீதைப் போல கர்த்தருக்குள் தங்களை எவ்வாறு பலப்படுத்திக்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும் வேறு யாரைப் பற்றியாவது நீங்கள் யோசிக்கலாம். இந்தச் செய்தியை அவர்களுக்கு அனுப்பி (forward செய்து), இந்தப் பயணத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
நாளை சந்திப்போம்!