உங்கள் விரக்தியின் எல்லையை நீங்கள் எட்டும்போது.
உங்கள் நாள் எப்படித் தொடங்கியது?
இன்று காலை, என்னால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியவில்லை, இரவில் என் கைபேசியை சார்ஜ் செய்ய மறந்துவிட்டேன், WiFi வேலை செய்யவில்லை, காப்பியும் தீர்ந்துவிட்டது. இவை அனைத்தும் காலை 9 மணிக்கு முன்பே!
சில நாட்கள், விரக்தி மெதுவாக என்னை நெருங்குகிறது. மற்ற நாட்களில், அது ஒரு அலையைப் போல என் வாழ்க்கையில் மோதுகிறது.
சில நேரங்களில் இது சிறிய விஷயங்கள். ரோட்டில் டிராபிக் மோசமாக உள்ளது. திட்டங்கள் மாறுகின்றன. செய்திகள் அச்சுறுத்துவதாக உணர்கின்றன. வீடு சத்தமாக இருக்கிறது. விரைவில், எனக்குள் ஏதோ ஆழமான ஒன்று நடப்பதை நான் உணர்கிறேன். விரக்தி உருவாகிறது.
நான் நேர்மையாக கூறவேண்டுமானால், விரக்தி என்பது சூழ்நிலைகளைப் பற்றியது மட்டுமல்ல. அது கட்டுப்பாட்டைப் பற்றியது. வாழ்க்கை என் திட்டங்களுக்கு ஒத்துழைப்பதை நிறுத்தும் போது, நான் பதற்றத்தை உணரத் தொடங்குகிறேன். என் பொறுமை சுருங்குகிறது. என் பார்வை குறுகுகிறது. என் சமாதானம் மறைகிறது. என் விசுவாசம் பலவீனமடைகிறது.
வாழ்க்கை சீராக இருக்கும் என்று இயேசு ஒருபோதும் கூறவில்லை. உண்மையில், அவர் நமக்கு எதிர்மாறாகச் சொன்னார். உலகம் உபத்திரவமும், அழுத்தமும், விரக்தியும் நிறைந்தது. ஆனால் இயேசு நமக்கு விரக்தியை விட வலுவான ஒன்றைக் கொடுத்தார்—அவருடைய சமாதானம்.
“என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.” – யோவான் 16:33
கேள்வி பிரச்சனை இருக்கிறதா என்பதல்ல. பிரச்சனை வரும்போது நாம் எங்கு செல்கிறோம் என்பதுதான் கேள்வி.
நான் விரக்தியில் உட்கார்ந்து அதை வளர விடலாம்… அல்லது இயேசுவிடம் கொண்டு வரலாம். பல ஆண்டுகளாக, நான் ஒரு முக்கியமான காரியத்தைக் கற்றுக்கொண்டேன்: விரக்தி உண்மையில் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஒரு நுழைவாயிலாக மாறக்கூடும்.
உங்கள் பொறுமையின் எல்லையை அடைவது என்பது, தேவனை ஆழமாகச் சார்ந்திருப்பதன் தொடக்கத்தில் நிற்பதாகும்.
எனவே இன்று, விரக்தியை எதிர்ப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே உலகத்தை ஜெயித்தவரிடம் அதைக் கொண்டுவரத் தேர்ந்தெடுக்கவும்.