கடைசி முயற்சி
சமீபக்காலமாக விலகிவிடலாம் என்று உணர்கிறீர்களா? விட்டுவிடத் தயாரா? வேண்டாம்.
நாகமானின் கதையிலிருந்து (2 இராஜாக்கள் 5) எனக்குப் பிடித்த பாடத்திற்கு வந்திருக்கிறோம்: விட்டுவிடாதீர்கள்!
தீர்க்கதரிசி நாகமானிடம் யோர்தான் நதியில் ஏழு முறை மூழ்கும்படி கூறினார்! நாகமான் ஆறு முறை மூழ்கிய பிறகு விலகியிருக்கலாம்! ஆனால் அவன் விலகவவில்லை!
ஆறாவது முறை மூழ்கி சுவாசத்திற்காக மேலே வந்த தருணம் எவ்வளவு விரக்தியாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவன் ஏற்கனவே தன்னைத் தாழ்த்தி, நதிக்குள் இறங்கி, மீண்டும் மீண்டும் மூழ்கியிருந்தான்—ஆறு முறை!
எதுவும் மாறவில்லை என்றால் என்ன செய்வது? நிறுத்துவது சுலபமாக இருந்திருக்கும். ஆனால் நாகமான் தொடர்ந்தான்.
அவன் ஏழாவது முறை மேலே வந்தபோது, எல்லாமே மாறியது. வேதாகமம் கூறுவது :
"அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்." – 2 இராஜாக்கள் 5:14
சில நேரங்களில் நாம் காத்திருக்கும் விடுதலை என்பது இன்னும் ஒரே ஒரு கீழ்ப்படிதலின் அடி தூரத்தில்தான் இருக்கிறது.
சில நேரங்களில், தேவன் நம்மை இவைகளைச் செய்ய அழைக்கிறார்…
இன்னும் ஒரு ஜெபம்.
இன்னும் ஒரு மன்னிக்கும் செயல்தான்.
தேவனை நம்புவதற்கான இன்னும் ஒரு முயற்சி.
விசுவாசம் எப்போதும் பிரமாண்டமானது அல்ல. பெரும்பாலும், அது சகிப்புத்தன்மையைப் போலத் தோன்றும். பெரும்பாலும், அது ஒவ்வொரு தருணமும் உண்மையுள்ளதோடு இருப்பதே ஆகும். இந்த உண்மையைத் தவறவிடாதீர்கள்!
நாகமான் முழு செயல்முறையையும் முடிக்கும் வரை அற்புதத்தைக் காணவில்லை. அதே கொள்கை இன்று நமக்கும் பொருந்தும்.
தேவன் பெரும்பாலும் காலப்போக்கில் விடாமுயற்சி, கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசம் மூலம் செயல்படுகிறார். விரக்தி நம்மை விலகச் சொல்லும்போது, விசுவாசம் நம்மைத் தொடர அழைக்கிறது.
இன்று நீங்கள் சோர்வாக இருக்கலாம். நீங்கள் ஏற்கனவே எல்லாவற்றையும் முயற்சித்துவிட்டதாக உணரலாம். தேவனைப் பின்பற்றுவது உண்மையிலேயே பலன் அளிக்குமா என்று சிந்திக்கிறீர்களா?
தேவனைப் பின்பற்றுவது எப்போதும் பலன் அளிக்கும் என்பதை நாகமானின் கதை எனக்கு நினைவூட்டுகிறது, ஏனெனில் கீழ்ப்படிதலின் மறுபக்கத்தில் மறுரூபமாக்கப்படுவது உள்ளது.
நாகமான் புதிய தோலை மட்டும் பெறவில்லை. அவன் ஒரு புதிய இருதயத்துடன் நடந்து சென்றான். தேவன் மனிதர்களின் வாழ்க்கை, உடல், மனம் மற்றும் சூழ்நிலைகளை அப்படி மாற்றுகிறார்!
இன்று நீங்கள் விசுவாசத்தின் எந்த அடியை எடுத்துவைக்க தேவன் கேட்கிறார்?